தேயிலை தோட்டங்கள் கற்றுக்கொடுப்பது என்ன??

தேயிலை தோட்டங்களை காணும்போதெல்லாம் என் கண்ணுக்கு தெரிவதெல்லாம்.. "என்ன அழகாக நடப்பதற்கென பாதையும் பயிரிட இடமும் என பிரித்திருக்கின்றார்கள் என்று தான்.

ஒரு பயிர் சாகுபடி முறை என்றெல்லாம் என் கண்ணுக்கு தெரியவில்லை. நிரந்தரமான தோட்டமாக இருக்க வேண்டும் என்றால் விதைக்குமிடத்தில் மனிதனின் காலடி படக்கூடாது. அப்படியானால் நமது தோட்டத்திலும் இதுபோன்று செய்திட முடியும் என்று ஏன் யாருக்கும் தோன்றவில்லை.

Location specific என கூறுவது உண்மைதான். ஆனாலும் யாரும் முயற்சி கூடவா செய்யவில்லை. ஐந்து ஏக்கர் நிலத்தை அரை ஏக்கர் அளவில் வரப்பு கட்டி பிரித்தது போல ஒவ்வொரு அரை ஏக்கர் நிலத்தையும் 4அடி விதைப்பிற்கான இடமும், 2 அடி நடைபாதைக்கான இடமும் என பிரித்தால் அவ்விடத்திற்கு உழவு செய்வதறகான வேலை இருக்காதல்லவா.. விதையை போடுவோம்..யாராவது அறுவடை செய்வார்கள்.

விதைப்பும் அறுவடையும் செய்வதை மட்டுமே வேலையாக கொள்ள வேண்டுமென்ற இந்த சோம்பேறிக்கேற்றதை தானே தேடுவான்.. நிலத்தை உழவு செய்து விவசாயம் செய்வது அவசியமில்லை எனும் நிலை வர வேண்டும். அந்த நிலைக்கு நிலம் குப்பை காடாக மாற வேண்டும். அந்த நிலைக்கு நிலம் மாற வேண்டும் என்றால் அதை தொடங்கிட மனிதனின் மனம் மாறிட வேண்டும்.

வேலிகளில் சென்று கோவைப்பழம் பிடுங்கி ருசிப்பதை தான் ஒன்றும் செய்யாத வேளாண்மை என்கிறோம்..வேறென்ன சொல்ல..

#do_nothing_farming

Comments

Popular posts from this blog

கடாரங்காய் கடாநாரத்தை

மரபு விதைகள் தேவைப்படுவோருக்கு

பீர்க்கன் விதை பன்மயம் RIDGE GOURD SEED DIVERSITY