Posts

Showing posts from August, 2017

சுத்தம் செய்யும் ஒரு சிறந்த பொருள்

புளித்த மாவை தவிர உலகில் வேறேதும் சிறந்ததொரு சுத்தம் செய்யும் பொருள் இருக்க முடியாது... இட்லி தோசை மாவை பாத்திரம் கழுவ பயன்படுத்தினால் எவ்வளவு எண்ணெய் பிசுக்கு இருந்தாலும் பாத்திரம் பளிச்சென ஆகிவிடும்.. அதே சமயம் இந்த பாத்திரம் முறையில் பாத்திரம் கழுவிய தண்ணீரை வீட்டில் தோட்டம் வைத்திருப்போர் செடிகளுக்கு ஊற்றலாம்..மண் நன்கு வளமாகும்.. (அரிசி பருப்பு அலசிய தண்ணீரில் ஒரு முறை அலசிவிட்டு மறுமுறை சாதரண தண்ணீரில் அலசி கொள்ளலாம். இந்த தண்ணீரை செடிகளுக்கு ஊற்றலாம்.) கிராமத்தில் பாத்திரம் கழுவ சாம்பலை பயன்படுத்துவோம்.. நகரத்தில் வசிப்போருக்கு சாம்பல் கிடைக்கவில்லையென்றால் இட்லி தோசை மாவை பயன்படுத்தி கொள்ளலாம்.. இந்த மாவை உடலில் பூசிக்கொண்டு சிறிது நேரத்திற்கு பிறகு தேய்த்து குளிக்கலாம்..உடலும் பளிச்சென்று இருக்கும்.. எல்லாமே சுய அனுபவம் தான்..