Posts

Showing posts from September, 2017

விதை முளைக்க வேண்டும்.

விதைகள் கேட்கும் நண்பர்களுக்கு ஒவ்வொரு வாரமும் புதன்கிழைமை அன்று விதைகள் அனுப்புகிறோம். சில வாரங்கள் வியாழன் அன்று அனுப்ப இயலுகிறது. புதன்கிழமை விதை அனுப்ப செவ்வாய்கிழமைக்குள் நண்பர்கள் விலாசம் அனுப்பினால் புதன் அன்று அனுப்ப இயலுகிறது. போன் எடுக்காத சூழலில் வாட்ஸ்அப் மூலம் தகவல் கொடுத்திடவும். பெயர் விலாசம் தேவைப்படும் விதைகள் தொடர்பு எண்ணை அனுப்பினால் எங்களிடமுள்ள காய்கறி விதைகளில் விதைப்பெருக்கம் செய்திட மட்டும் 10,20 விதைகள் தந்து வருகிறோம். நீங்கள் விதைகளை எங்கே சேகரித்தாலும் விதைப்பதற்கு முன் சில விசயங்களை செய்திடுவது நலம். விதைகளை முந்தைய நாள் எடுத்து வெளியில் காய வைத்து விடுங்கள். (வீட்டிற்குள்ளே கூட) மாலை முதல் காலை 10மணி வரை காய விடுங்கள். தக்காளி, கத்தரி,மிளகாய் போன்ற நா்று விடும் விதைகளை அரை மணி நேரம் வரையிலும், வெண்டை,கொத்தவரை,காராமணி போன்று சிறிய அளவு விதைகளை ஒரு மணி நேரம் வரையிலும், பாகல்,புடலை,சுரை,பூசணி போன்ற விதைகளை ஆறு மணி நேரம் வரையிலும் தண்ணீரில் ஊற வைத்து பிறகு விதைக்கவும். கொடி காய்கறி விதைகளை ஆறு மணி நேரம் ஊற வைத்து பிறகு முளைகட்டி வைத்து விதைக்கலாம். அல்லத