Posts

Showing posts from January, 2017

கல்வெட்டுகளில் பொறிக்க வேண்டிய மரபு காப்பாற்றப்பட்ட புரட்சியில் கற்றுக்கொண்டோம்

அரசியல் பிடிக்கலை.. அடுத்து வர்ற தேர்தலை புறக்கணிப்போம் என நினைப்பது எந்தவித அறிவார்ந்த விசயமும் இல்லையே.. ஓட்டு போடு.. யார் அதிகாரத்திற்கு வந்தாலும் உனக்கு என்ன வேணுமோ கேளு.. இனி புறக்கணிப்பது என்பதை கற்றுக்கொடுக்காத.. யாருகிட்ட எப்படி கேட்கனும் என்பதை கற்றுக்கொடு.. நமக்கு வேண்டும் என்பதை கேட்கின்ற விதத்தில் கேட்டதனால தான் கெடச்சுது.. இதுக்கு முன்னாடியும் கேட்டுக்கிட்டே தான் இருந்தோம்..ஆனா அதை ஒரு விசயமாவே எடுத்துக்கவே இல்லை.. இவங்க கேப்பாங்க விட்டுடுவாங்கன்னு நெனச்சாங்க.. இந்த முறை தெரிஞ்சுக்கிட்டோம்.. கிடைக்கறவரைக்கும் கேட்கனும்.. #10வருசமா_5_பேர்_10_பேரா_கேட்டாங்க.. காதுல வாங்குன பாடில்லை.. இப்போ #10நாட்களாக_5_லட்சம்_10லட்சம் பேரா கேட்டோம்.. கிடைக்கறவரைக்கும் கேட்டோம்.. கொடுத்துட்டாங்க.. நமக்கு என்ன வேண்டும் என்பதில் தெளிவாகவும் இருந்தோம். அதனால் கேட்டது கிடைத்துவிட்டது.. அப்போ  ஒவ்வொரு விசயத்திற்கும் இவ்ளோ சிரமப்படனுமா என கேட்காதீங்க.. இது சிரமம் இல்லை.. சந்தோசம். முன்னயெல்லாம் ஊருல திருவிழாவா நடக்கும்.. எல்லோரும் ஒன்னு கூடி ஒரு விசயத்தை செஞ்சோம். இப்போ ஓட

One day guest lecturer for college students

Image
நாள்: 6/1/17 வெள்ளி கல்லூரி: விவேகானந்தா மகளிர் பொறியியல் கல்லூரி, பயிற்சி: விவசாயம் "ORGANIC FARMING" பகிர்ந்து கொண்ட விசயங்கள்: 1)ஏன் நாம் விவசாயம் செய்ய வேண்டும்?? முன்னோர்களின் வாழ்க்கையை சுட்டிகாட்டி தற்போதைய சூழல் வியாபாரமாக ஆக்கப்பட்டு, விவசாயிகளும், நுகர்வோரும் பகடகாய்களாக இருக்கும் சூழலை பகிர்ந்துகொண்டோம்.  2)விவசாயத்திற்கான முதல் படி??     சுய உணவு தேவை பூர்த்தி செய்வதில் விவசாயத்தை துவங்குவோம்.  அவ்வாறு செய்வதன் மூலம் முதலில் நாம் ஆரோக்கியமாக இருக்க முடியும்.  தனக்கான உணவு என்பதால் நாட்டு விதைகளை தேடி தேடி சேகரித்து பாதுகாக்கும் விதை வங்கியாக முடியும்.  தற்போது தனக்கான உணவை கூட உற்பத்தி செய்யாத விவசாயியினால் விதைகளை பாதுகாக்க இயலவில்லை. தன் சுய தேவைக்கான கால்நடைகள் வளர்க்காததால் கலப்பின கால்நடைகள் அதிகமாக புழக்கத்திற்கு வந்தது. தீர்வு இதுதான் சுயதேவைக்கான விவசாயம் மிக எளிது.. அதை முதலில் துவங்குவோம்.  3)ஆர்கானிக் ?? மண்- தாய் செடி- கருவிலுள்ள குழந்தை தாயை ஆரோக்கியமாக பார்த்து கொள்வதே ஆர்கானிக்.  4)சுயதேவை என்ற

தாய் வித்து

ஒரு பெண் காப்பாற்றப்படுவாளாயின், ஒரு சந்ததியே காப்பாற்றப்படுவதாக நாம் சொல்வதுண்டு. நம் சமூகம் தாய்வழி சமூகம் என்றும், தாய்த்திருநாடு; தாய்மண் என இயற்கையை பெண்ணாகவே நாம் வணங்கி வருகிறோம். அதன் தொடராக நாம் இங்கு பகிரவிருப்பதும், பிறப்பின் போதே கருவை சுமந்துகொண்டு பிறக்கும் "விதைகள்" பற்றியே. அதிலும் குறிப்பாக பல்லாயிரம் ஆண்டுகளாக நமக்கு முன்பிருந்தே இங்குள்ள இயற்கையின் சூழலில் வாழ்ந்து இங்குள்ள அனைத்து தட்பவெட்ப சூழலுக்கும் ஏற்றபடி தங்களை தகவமைத்து வாழக்கற்றுக்கொண்ட மரபு விதைகளை பற்றி பேசவிருக்கிறோம். இயற்கையின் படைப்பில் ஒரு அற்புதம் என்றால் அது முன்னேற்பாடு என்றே கூறலாம். மனிதன் இந்த உலகில் வாழ வேண்டுமானால் அவன் வாழ்வதற்கு தேவையான அனைத்து சூழலையும் இயற்கையே ஏற்படுத்திய பின்னரே மனிதன் என்ற உயிரினத்தை உருவாக்குகிறது. மனிதனின் பிறப்பிற்கு முன்பே மற்ற பறவைகளும் விலங்குகளும் இவ்வுலகில் தோன்றி அவைகளுக்காக உருவாக்கப்பட்டிருந்த இயற்கை சூழலில் வாழ்ந்து அங்குள்ள தாவரங்களின் இலைகளையும் காய்களையும் பழங்களையும் உணவாக உட்கொண்டு தான் உண்ணும் பழங்களின் விதைகளை தன்னை அறியாதே விதைத்து விவசாயம