மரபு விதைகளின் தாம்பூல விதைகள்

#Return_gift
#தாம்பூல_விதைகள்

நண்பர்களுக்கு வணக்கம் ..
                                                 திருமணத்திற்கு வந்து வாழ்த்திச் செல்லும் உறவுகளுக்கு தாம்பூலப்பை கொடுப்பது நம் மரபு. .. அதில் தேங்காய் கொடுப்பது சிறப்பாக இருந்தது .. பயண கலைப்பு நீங்க போகும் வழியில் தாகம் தீர்க்க அந்த அற்புத நீர் பயன்படும் நோக்கில் தேங்காயை தாம்பூலப்பைகளில் கொடுத்து அனுப்பினர் ..
                                           
                                              சமீப காலமாக மரக்கன்றுகள் வழங்கி வரும் நற்காரியங்களும் நடந்து வருகிறது .. அதேபோல நகரப்பகுதிகளில் நடக்கும் திருமண நிகழ்வுகளுக்கு வந்து செல்லும் உறவுகளுக்கு தாம்பூல பைகளில் நம் பாரம்பரிய விதைகளையும் கொடுக்கலாம் என நெறைய நண்பர்கள் கேட்டுக்கொண்டதன் படி கடந்த மாதங்களில் சில திருமணங்களுக்கு "ஆதியகை திருமண தாம்பூல விதைகள் " வழங்கி வருகிறது . நம் மரபு விதைகள் அனைவரிடமும் பகிரப்பட வேண்டுமென்பதன் நோக்கத்திலும், நகரங்களின் வீடுகளில் காய்கறி தோட்டங்கள் பெருக வேண்டுமெனவும் இந்த முயற்சி பரவலாக்கப்படுகிறது ..
                                           நண்பர்களுக்கு இவ்வாறான திருமண தாம்பூல விதைகள் தேவைப்படுமாயின் 20நாட்களுக்கு முன்னர் தகவல் கொடுக்கும் பட்சத்தில் விதைகள் தருகிறோம்.

         2014 ஆம் ஆண்டு முதல் மரபு விதைகளை சேகரித்து வருகிறோம். கிடைப்பது 5விதையோ 10விதையோ தோட்டத்தில் விதைத்தால் மண்ணும் மழையும் பல மடங்கு விதைகளை திருப்பி கொடுத்தன.. அவ்வாறு தோட்டத்தில் கிடைத்த விதைகளை பொட்டலங்களாக்கி மரபு விதைகள் கேட்போருக்கு கொடுத்து வருகிறோம். விதைகளை யாருக்கும் நிறைய கொடுப்பதில்லை. 10,20 விதைகளாக கொடுக்கின்றோம். அவ்வாறு வாங்கி செல்லும் நண்பர்கள் விதைப்பெறுக்கம் செய்து அவர்கள் தேவை போக மீதமுள்ள விதைகளை பகிர்கின்றனர். இவ்வாறு விதைகளை பகிர்ந்து வரும் சூழலில் நிறைய நண்பர்கள் தங்களுடைய வீட்டில் நடக்கும் திருமணம், வளைகாப்பு, புதுமனை புகுவிழா, தொழில் தொடங்கும் விழா, ஊர் திருவிழா என பல்வேறு நிகழ்வுகளுக்கு அவ்வபோது விதைகளை கேட்டதை தொடர்ந்து "தாம்பூல விதைப்பைகள்" என்ற பெயரில் மரபு விதைகளை பகிர்கின்றோம். இதன் மூலம் ஒரே சமயத்தில் பலதரப்பட்ட மக்களுக்கும் விதைகள் சென்றடைகின்றன.. விதைகள் பெற்ற நண்பர்கள் விவசாயிகளாக இருப்பின் நிலங்களில் பயிரிட்டு விதைகளை காக்கின்றார்கள். நகரங்களில் இருப்போர் வீடுகளிலும் மாடிகளிலும் தோட்டம் அமைத்து தன் குடும்பத்திற்கான காய்கறிகளை உற்பத்தி செய்வதோடு விதைகளையும் காக்கின்றனர். மரபு விதைகள் அனைவருக்கும் விதைகளாக சென்றடைவதோடு மட்டுமன்றி விதைகளை காக்க வேண்டுமென்ற விழிப்புணர்வையும் விவசாயம் செய்யாதவர்களையும் சென்றடைகிறது.. தொடர்ந்து இந்த மரபு விதை பரவலாக்கும் பணியில் எங்களை ஈடுபடுத்திக்கொள்கிறோம்.

தங்களுடைய வீட்டிலோ, நண்பர்கள் உறவினர்கள் வீட்டிலோ, ஏதேனும் ஒரு நல்ல நிகழ்ச்சி நடந்தால் நிகழ்விற்கு வரும் நண்பர்களுக்கு மரபு விதைகளை பரிசாக அளியுங்கள்.
நாங்கள் கொடுக்கும் தாம்பூலப்பைகளில் ,கத்தரி,மிளகாய்,வெண்டை, கொடி காய்கறிகள், கீரைகள் என பத்து ரக விதைகள் கொடுக்கின்றோம். தேவைப்படும் அளவில் பெற்றுக்கொள்ளலாம்.

தாம்பூலப்பைகளில் வெற்றிலை பாக்கு, தேங்காய் வைத்து தருவது நம் வழக்கம்.. இதை வெறுமனே கொடுக்கவில்லை.. தேவைகள் கருதியே கொடுத்தார்கள். உணவிற்கு பிறகு வெற்றிலை பாக்கு உணவிற்கு பிறகு நாம் எடுத்துக்கொள்ள வேண்டுமென்றும், அதிக தூர பயணத்திற்கு தேங்காய் தண்ணீரும் தேங்காயும் பயன்படும். அவ்வாறான தேவைகளின் அடிப்படையில் இந்த கால மாற்றத்திற்கு ஏற்றவாறு நாமும் தாம்பூல பைகள் கொடுப்போம் என இறங்கினோம்.

நாம் சேமித்து வைத்திருக்கும் நாட்டு ரக விதைகளை தாம்பூல பைகளில் கொடுக்கலாம். அது நிறைய மக்களுக்கு உடனடியாக போய் சேரும்.இன்றைய சூழலில் வீடுகளில் தோட்டம் அமைத்து தன் தேவையை பூர்த்தி செய்யும் வழக்கம் பரவலாகி வருகிறது. அவர்களுக்கு இந்த நாட்டு ரக விதைகள் கையில் கிடைத்தால் அவர்களுக்கு வசதியாக இருக்கும் என எண்ணினோம்.

அதே சமயம் ஒரு வீட்டிற்குள் இவ்விதைகள் போகும்போது, விதைகள் இருக்கிறதே..! நம் வீட்டிலும் தோட்டம் அமைக்கலாம் என்ற எண்ணம் மேலோங்கும்.

விவசாயகளிடமும் இன்று நம் நாட்டு ரக விதைகள் பாதுகாக்கப்படவில்லை. அவர்களுக்கு கிடைத்தால் தன் தேவைக்கு பயன்படுத்த தொடங்குவார்கள்.

இளைய தலைமுறையினர் விவசாயம், வீட்டுத்தோட்டம் என வருகின்றனர். அவர்களுக்கு விதைகள் கிடைத்தால் நிறைய பகிர்ந்தளிக்கப்படும்.

இவ்வாறு பல்வேறு காரணங்கள் கருதி தற்போது மரபு ரக விதைகளை கொண்ட தாம்பூல பைகளை வழங்கி வருகிறோம். தங்களுடைய வீட்டின் நிகழ்வுகளிலோ நண்பர்களுக்கோ பரிந்துரை செய்து இந்த விதைகள் அனைவருக்கும் பரவலாக்க முன்வருமாறு அழைக்கின்றோம்.
இதன் மூலம் கடந்த ஒரு வருடமாக தாங்கள் வருவாய்காக பயிர் செய்து வந்த ஒரு ஏக்கர் நிலம் ஒதுக்கி நாட்டு்ரக விதைகளை பயிர் செய்து விதைகளை சேமித்து வைத்திருக்கும் ஒரு விவசாய குடும்பத்திற்கும் ஒரு வருவாய் கிடைக்கும்.

தங்களுக்கு இந்த செய்தி பயனாக இருந்தால் நண்பர்களுக்கும் பகிருமாறு கேட்டுக்கொள்கிறோம்.

தக்காளி,கத்தரி,மிளகாய், வெண்டை, கீரை வகை, கொடி காய்கறிகளின் விதைகள் அடங்கிய விதைப்பொட்டங்களை தாம்பூல பைகளில் தருகின்றோம்..

நன்றி.
ஆதியகை மரபு விதை சேகரிப்பாளர்கள்.
ஒட்டன்சத்திரம்.
திண்டுக்கல் மாவட்டம்

8526366796 (w.app)
Facebook @Paramez Aadhiyagai
http://aadhiyagai.blogspot.in
Paramez.zurich@gmail.com
________.__________._________

#ஆதியகையின்_தாம்பூலம்

Comments

Popular posts from this blog

கடாரங்காய் கடாநாரத்தை

மரபு விதைகள் தேவைப்படுவோருக்கு

பீர்க்கன் விதை பன்மயம் RIDGE GOURD SEED DIVERSITY